உடுமலை அமராவதி அணையில் நீர்வரத்து பூஜ்ஜியம்; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணையில் நீர் வரத்து பூஜ்ஜியம் ஆன நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது.



இந்த நிலையில், தற்பொழுது போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு கடந்த சில தினங்களாகவே நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி பூஜ்ஜியம் ஆனது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகள் தெரியும் அளவில் உள்ளது. தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில், தற்போது 39.40 அடியாக உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...