வங்கி மேலாளர் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை துளசியம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இவரும், இவரது மனைவியும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சுரபி அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் பணி நிமித்தமாக சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் துறைக்கு வங்கி அதிகாரி ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்க்கு  வந்த காவல் துறையினர் வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்கள் ஏதேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் 7 லட்ச ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...