பொள்ளாச்சியில் ஒற்றைக் காட்டு யானை உலா - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

வால்பாறை சாலை பகுதியில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து, பின்னர் வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, செந்நாய்கள் மற்றும் பறவை இனங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் தாக்கம் முடிந்து வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடங்கியுள்ளது.

இதனால் ஆழியார் அணை பகுதிகளில் இருந்த காட்டு யானை கூட்டங்கள் பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை சாலை பகுதியில் நேற்று மே.13 வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது. அப்போது வாகனத்தில் இருந்த பயணி இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...