சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே.20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது கோவை நீதிமன்றம்

பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியது மற்றும் கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோவை நீதிமன்றம், மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


கோவை: பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கிற்கான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது. இதன்பேரில் சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்களில் லேசான கிராக் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போடப்பட்டது.

இதனிடையே கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை கோவை நான்காவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு அனுமதி வழங்கினார். விசாரணைக்கு பின்னர் இன்று (மே.14) மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, தான் கைது செய்யப்பட்ட முதல் இரண்டு வழக்குகளான பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியது மற்றும் கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. பின் விசாரணையின்போது, யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை (மே.20) ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...