நெல்லில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணங்களின் ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு நிதியுதவி

ஊட்டச்சத்துக் குறைபாடு, பெண்கள் மற்றும இளம் வயது சிறுவகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கவல்லது. நமது நாட்டில் ஏறத்தாழ 56.2 சதவிகித பெண்கள் இரத்தசோகை குறைபாடுடனும் மற்றும் 0-3 வயதுள்ள குழந்தைகளில் 45 சதவீதம் சராசரிக்கும் குறைவான எடையையும் கொண்டுள்ளனர்.

இந்த குறைபாடுகளை தீர்க்கவல்ல சத்து மாத்திரைகள் மற்றும் சிறப்பு உணவுக்கான செலவு அதிகமாதலால், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலனுக்கு அது ஒரு எட்டாக்கனியாக உள்ளது.

நெல் போன்ற பிரதானப் பயிர்களில் மரபியல் மேம்படுத்தல் முறையில் ஊட்டச்சத்துக்களை செறிவுபடுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

இந்திய அரசாங்கத்தின் உயிர் தொழில் நுட்ப தொழிற்சாலை ஆராய்ச்சி உதவிகுழுமம், “குழந்தைகளின் உடல் நலம் காத்தல் என்ற ஒரு திட்டத்தினை அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனம், வெல்கம் டிரஸ்ட் மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து மருந்துகள் மற்றும் வேளாண் பொருட்களின் மூலம் போக்கிடும் திட்டத்தினை செயல்படுத்துகின்றது. 

இந்த திட்டத்தின் கீழ், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த தாவர மூலக்கூறுவியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் மையமும், மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லின் மூலம் பேணுவதற்காக வரைந்த ஒரு திட்டம் 1.5 கோடி நிதியுதவியுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் உயர்விளைச்சல் மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லில் உள்ள முக்கிய குணாதிசயங்களான ஃப்ளாவனாய்டுகள், லியூட்டின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச் சத்துக்களின் உயிர்நிலைப்புத்தன்மை மற்றும் சர்க்கரை நோயை எதிர்க்கவல்ல குறியீடுகளை ஆராய்ச்சி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...