நெல்லில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணங்களின் ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு நிதியுதவி

ஊட்டச்சத்துக் குறைபாடு, பெண்கள் மற்றும இளம் வயது சிறுவகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கவல்லது. நமது நாட்டில் ஏறத்தாழ 56.2 சதவிகித பெண்கள் இரத்தசோகை குறைபாடுடனும் மற்றும் 0-3 வயதுள்ள குழந்தைகளில் 45 சதவீதம் சராசரிக்கும் குறைவான எடையையும் கொண்டுள்ளனர்.

இந்த குறைபாடுகளை தீர்க்கவல்ல சத்து மாத்திரைகள் மற்றும் சிறப்பு உணவுக்கான செலவு அதிகமாதலால், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலனுக்கு அது ஒரு எட்டாக்கனியாக உள்ளது.

நெல் போன்ற பிரதானப் பயிர்களில் மரபியல் மேம்படுத்தல் முறையில் ஊட்டச்சத்துக்களை செறிவுபடுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

இந்திய அரசாங்கத்தின் உயிர் தொழில் நுட்ப தொழிற்சாலை ஆராய்ச்சி உதவிகுழுமம், “குழந்தைகளின் உடல் நலம் காத்தல் என்ற ஒரு திட்டத்தினை அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனம், வெல்கம் டிரஸ்ட் மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து மருந்துகள் மற்றும் வேளாண் பொருட்களின் மூலம் போக்கிடும் திட்டத்தினை செயல்படுத்துகின்றது. 

இந்த திட்டத்தின் கீழ், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த தாவர மூலக்கூறுவியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் மையமும், மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லின் மூலம் பேணுவதற்காக வரைந்த ஒரு திட்டம் 1.5 கோடி நிதியுதவியுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் உயர்விளைச்சல் மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லில் உள்ள முக்கிய குணாதிசயங்களான ஃப்ளாவனாய்டுகள், லியூட்டின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச் சத்துக்களின் உயிர்நிலைப்புத்தன்மை மற்றும் சர்க்கரை நோயை எதிர்க்கவல்ல குறியீடுகளை ஆராய்ச்சி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...