கோவை மாவட்ட கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கான மூன்றடுக்கு குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடியின் தலைமையில் நடைபெற்று பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.


கோவை: இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதாசுமன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் ர.பாலமுரளி உட்பட மாவட்ட கல்வி அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்தல் வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மற்றும் பொதுத்தரவில் உள்ள 5,662 குழந்தைகளை கிராமம் வாரியாக பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களை நேரடியாக அனைத்து துறை அலுவலர்களும் சந்தித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பள்ளிக்கு வரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்விற்கு வருகை புரியாத மாணாக்கர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை எதிர்வரும் துணை தேர்வில் பங்கேற்கச் செய்ய உரிய மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு நடவடிக்கைகளை அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து தொடர்ந்து கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் இடைநிற்றல் அவர்களை சமூகத்திற்கு எதிரான செயல்கள் செய்ய தூண்டும் எனவும் மேலும் போதைப் பொருள் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் அறிவுறுத்தினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...