கவுண்டம்பாளையம் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

நீதிமன்ற உத்தரவை கொடுக்க சென்ற கவுண்டம்பாளையம் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாதவன் என்பவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). இவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று (மே.14) சாய்பாபா காலனி பகுதியில் ஒரு குற்றவாளிக்கு நீதிமன்ற உத்தரவை (வாரண்ட்) கொடுக்க சென்றார். அப்போது அந்த ஆசாமி ஏட்டு ராஜேந்திரனையும், மற்றொரு போலீஸ்காரரையும் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர், இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த மாதவன் என்ற தக்காளி மாதவன் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.இவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...