கரிவரதராஜா பெருமாள் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை - எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு

கரிவரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி பத்ரிநாராயணனிடம் இன்று (மே.15) மனு அளித்தனர்.



அந்த மனுவில், எங்கள் பகுதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் நிர்வாகம் திருப்பணி கமிட்டி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. ஆனால், சிலர் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். எனவே, கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...