தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேர் கைது

மே 15, கோவையில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய அருகே உயர் ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாக ரகசிய தகவல். சோதனையில் 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டெடுப்பு; 6 பேர் கைது.


Coimbatore:

கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதைப் பொருள் விற்பனை செய்யும் சம்பவம் இன்று (மே 15) கண்டறியப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி, சிறப்பு காவல் படை தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தியது. அங்கு 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஜஹான் இஸ்மாயில் மனைவி ஆஷ்மா கா துன் (40), இத்ரிஷ் அலி மனைவி ஜஹீரா கா துன்(29), எசியாசின் அலி மகன் இத்ரிஷ் அலி(29), அலிஹீசைன் மனைவிகுதிஜா கா துன்(37), மன்சூர் அலி மகன் அலிஹீசைன்(48) மற்றும் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



அவர்களிடமிருந்து ரூபாய் 2,10,000 மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1,900 பிளாஸ்டிக் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...