மங்களூரு - கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையைத் தொடர்ந்து, மங்களூரு மற்றும் கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் மே 18 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore:

சேலம் ரயில்வே கோட்டம், கோடை விடுமுறையை முன்னிட்டு மங்களூரு மற்றும் கோவை இடையே விசேஷ வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மே.15 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மங்களூரில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்றைய மாலை 6.15 மணிக்கு கோவையை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கோவையில் இருந்து மே.18 தொடங்கி ஜூன்.29 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் காசார்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு மற்றும் போத்தனூர் போன்ற நிலையங்களில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...