வால்பாறையில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது

வால்பாறையில் பருவமழை நேரத்தில் சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கைகள், முகாம்கள் அமைத்தல், கால்நடைகள் காக்கவும் வன உயிரினங்கள் புகுதல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்து வரும் இந்த மழையால் வால்பாறையில் உள்ள சோலையார் அணை, சின்னக்கல்லார் அணை, நீரார் அணை மற்றும் அக்காமலை செக்டேம் ஆகியவை நிரம்பி வழியும் இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.



அதிக மழை பெய்யும் போது குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வண்ணமும், சாலைகளில் மரங்கள் தடுக்கவும் மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சப் கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில் வாசுதேவன் மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகராட்சி திருமண மண்டபம் மேலும் அட்டகட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சோலையார் அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அதிக மழை பெய்வதற்கு முன்பதாகவே அவர்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ துறை சார்பாக டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கொசுகளை ஒழிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான மருந்துகளை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்தினர்.



மேலும் அரசு பேருந்துகளை சரியாக செயல்படுத்த வேண்டும் மேலும் மின்சார துறை சார்பாக மின் துண்டிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும் வனத்துறை சார்பாக வனவிலங்குகள் ஊருக்குள் போகாமல் தடுக்க வேண்டும் ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் மண்ணரிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பாடாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனை செய்ய வேண்டும் என்றும்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...