மங்களூரு - கோவை சிறப்பு ரயில் சேவையின் நேரம் மாற்றம்

மங்களூரு முதல் கோவை வரையிலான சிறப்பு ரயில் சேவையின் புறப்படும் மற்றும் வந்தடையும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.


Coimbatore: பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மங்களூரில் இருந்து மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்குப் புறப்படும் மங்களூரு - கோவை சிறப்பு ரயில் (எண்: 06041) அன்று மாலை 6.15 மணிக்கு கோவையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த ரயிலானது, போத்தனூரை சென்றடையும் நேரமானது, மாலை 5 மணியில் இருந்து 4.50 ஆகவும், கோவை நிலையத்தை சென்றடையும் நேரமானது மாலை 6.15 மணியில் இருந்து மாலை 5.25 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...