உடுமலை அருகே அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு - பாசன விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மோட்டார் வைத்து தொழிலதிபர்கள் திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசனத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோக தென்னை, வாழை, கரும்பு பயிரிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று தாராபுரம் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் ஆயிரம் கன அடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.



இதற்கு இடையில் அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்களுக்கு மோட்டார் வைத்து திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கூறி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அமராவதி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுனர்.



பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொழிற்சாலை அதிபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தண்ணீர் திருடும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டிப்பதாகவும், உடனடியாக அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக பதிக்கப்பட்டுள்ள பைப் லைன்கள், மின்மோட்டார்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தபட்டது.

இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமராவதி புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு நாளை மறுநாள் அமராவதி அணையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...