தாராபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம்பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை ஐந்து மணி முதல் லேசாக பெய்ய துவங்கிய மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.



இந்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரம் என்பதால் தங்களது பணியை முடித்துவிட்டு வரும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். மாலை வேலை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.



இந்த மழை காரணமாக மாலை நேரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.



தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அமராவதி ரவுண்டானா பகுதி, பொள்ளாச்சி சாலை, பூக்கடைக்காரனர், மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...