பாப்பநாயக்கன்பாளையத்தில் இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து உணவு தேடிய ஒற்றை காட்டு யானை – சிசிடிவி வெளியீடு

வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றை காட்டுயானை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குணசேகரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து உணவு ஏதாவது இருக்கிறதா? என்ற தேடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, குணசேகரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து அவரது வீட்டை சுற்றிச் சுற்றி உணவு தேடியது. மேலும் அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரிலும் உணவு தேடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாக ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளாக மாங்கரை, வீரபாண்டி, தடாகம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை உணவு தேடி அங்கிருந்த குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் அங்கிருந்த நாய்கள் குரைக்கத் தொடங்கின. அப்போது அந்த யானை வீட்டைச் சுற்றி சுற்றி உணவு தேடியது. அங்கு இருந்த அரிசி மூட்டையை தூக்கி வீசி அதைத் திண்று சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரிலும் ஏதாவது உணவு இருக்குமா என தேடியது.

உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து சென்று விட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது காட்டு யானை இருப்பதை கண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிட்டனர். இது அங்கு பொருத்தியிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...