மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு - இன்று ஒரு நாள் மட்டும் ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. இதனால், மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை, ரயில்வே நிர்வாகம் இன்று (மே.18) ஒரு நாள் மட்டும் ரத்து செய்துள்ளது.


கோவை: கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று மே.17ம் தேதி இரவு பெய்த தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது.



தொடர்ந்து ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை, ரயில்வே நிர்வாகம் இன்று (மே.18) ஒரு நாள் மட்டும் ரத்து செய்தது.



மேலும் வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலை ரெயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மலை ரெயிலில் சுற்றுலா பயணம் செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...