கோவை சுகுணாபுரத்தில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடி உற்சாகம்

சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று, பக்தர்களுடன் இணைந்து ஜமாப் இசைக்கேற்றவாறு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


கோவை: கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று (17.05.2024) திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்த திருவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி. அன்பரசன் மற்றும் சகோதரர் செந்தில்குமார் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



தொடர்ந்து திருவிளக்கு பூஜையை வித்தியாதேவி வேலுமணி தனது மகளுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்திபரவசத்துடன் திருவிளக்கிற்கு சந்தனம், குங்கும் இட்டு, மலர் தூவி மனதார பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.அதைதொடர்ந்து முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன், சகோதரர் செந்தில்குமார் ஆகியோருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக பரிவட்டம் கட்டி முதல்மரியாதை அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று எஸ்.பி.வேலுமணி பக்தர்களுடன் இணைந்து ஜமாப் இசைக்கேற்றவாறு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அதைதொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...