மாணவர்கள் தாக்கியதில் செல்போன் திருடியவர் பலி- இரண்டு மாணவர்கள் கைது

கோவை சரவணம்பட்டியை அடுத்த வையாபுரி நகரில் செல்போனை திருடிக்கொண்டு ஓடிய மைக்கேல் என்ற நபரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி வையாபுரி நகர் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக்கொண்டு ஓடியுள்ளார். இதை பார்த்த மாணவர்கள் அவரை விரட்டியதில், மாடியில் இருந்து செல்போன் திருடிய இளைஞர் குதித்துள்ளார். இதில் காயமடைந்த அவரை பிடித்து தாக்கிய மாணவர்கள், அவரிடம் விசாரித்த போது செல்போனை திருடியவர் பெயர் நாகர்கோவிலை சேர்ந்த மைக்கேல் லிபர்டி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவர்கள் செல்போன் திருடிய மைக்கேல் லிபர்டி வீட்டிற்கு போன் செய்து தகவல் தெரிவித்ததுடன், மீண்டும் அவரை தாக்கி அதே இடத்தில் போட்டு விட்டு கல்லூரிக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் காயங்களுடன் கிடந்த மைக்கேல் லிபர்டியை அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகமரணம் என வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மைக்கேல் லிபர்டியின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதித்தனர். 

இந்நிலையில் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மைக்கேலின் உறவினர்கள், நண்பரை பார்ப்பதற்காக மைக்கேல் கோவை வந்ததாகவும், அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் அவரை தாக்கியதில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கை சந்தேக மரணமாக பதியாமல் கொலை வழக்காக பதிய வேண்டும் எனவும் அப்போதுதான் உடலை பெற்றுச்செல்வோம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவில்பாளையம் காவல் துறையினர் இதை கொலை வழக்காக மாற்றம் செய்ததுடன் சபரி, அந்தோணி என்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...