கோவையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் திணறல்

கோவையில் நேற்று கனமழையால் உக்கடம், மற்றும் சுங்கம் பைபாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறினர்.


கோவை: கோவையில் நேற்று (மே.18) 2 மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்த கனமழையால் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகளில் நீர் தேங்கியது. இந்த நிலையில் மழை ஓய்ந்த சற்று நேரத்தில் கோவை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.



குறிப்பாக உக்கடம், மற்றும் உக்கடம் முதல் பாலக்காடு செல்லும் சாலை, சுங்கம் பைபாஸ் செல்லும் சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. மேலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.



இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என பலரும் பேருந்திற்கு காத்திருக்கும் நிலையை எதிர்கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...