உடுமலை அருகே மீன்கள் மற்றும் கன்று குட்டிகள் இறப்பு - குடிநீர் மாசடையும் அபாயம்

உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இன்று ஆயிரக்கணக்கான மீன்களும் ஒரு கன்றுகுட்டியும் மர்மமாக இறந்து கரை ஒதுங்கின. இதனால் குடிநீர் மாசடையும் அபாயமும் நிலவுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. மேலும் உடுமலை நகராட்சி மற்றும் குடிமங்கலம், மடத்துக்குளம், சங்கரமநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் வகையில் குடிநீர் வினியோகமும் நடைபெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அணையில் கட்லா,ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் வளர்ப்பும் நடைபெற்று வருகிறது.

நடப்பு ஆண்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கோடை வெப்பம் தாக்கம் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து சுற்றுப்புற கிராமங்களுக்கு நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் திருமூர்த்தி அணையில் வளர்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. அவற்றை பறவைகளும், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளும் உணவாகக் கொண்டு வருகின்றன.



அரைகுறையான உடலுடன் அணை பகுதி முழுவதும் ஆங்காங்கே மீன்கள் செத்துக் கிடப்பதால் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. அத்துடன் குடிநீரும் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதன் விளைவாக மீன்கள் இறந்ததா? அல்லது தண்ணீர் மாசுபாட்டால் இறந்ததா என விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. மீன்கள் இறந்து வருவதால் மீனவர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.



இதே போன்று கன்று குட்டி சடலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. அவற்றை அகற்றுவதற்கும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அணை நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே திருமூர்த்தி அணை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ள மீன்கள் மற்றும் கன்று குட்டியை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மீன்கள் இறப்பு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...