கொடுவாய் பகுதியில் தொடர்ந்து நடக்கும் வெறிநாய் தாக்குதல்கள் - விவசாயிகள் வேதனை

திருப்பூர் கொடுவாய் பகுதியில் வெறிநாய்கள் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து வருவதால் விவசாயிகள் கடும் வேதனையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த கொடுவாய் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பங்காம் பாளையம் மற்றும் சாய்ராம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருக்களில் அலையும் நாய்களுக்கு வெறிபிடித்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாகவும் அவை வீடுகள் மற்றும் தோட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளை தாக்குவதாகவும் அப்பகுதி ஊர்ப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பங்காம்பாளையம் பகுதியில் வசிக்கும் முத்துசாமி என்ற விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசு கன்றுக்குட்டியை நல்லிரவு சுமார் 1 மணி அளவில் வெறிநாய் கூட்டம் சுற்றி வளைத்து கடித்து கொன்றுள்ளது.



மேலும் கன்று குட்டியை நாய்கள் வேட்டையாடுவதை பார்த்த தாய் மாடு கட்டிவைத்த பகுதியில் சுற்றி சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு வந்த பசுவின் உரிமையாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் தினந்தோறும் நடைபெறுவதாகவும், இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வெறிநாய்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிரை காவு வாங்குவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உயிர்களை காவு வாங்குவதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...