வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் பட்டு விவசாயிகள் மனு

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் பட்டு விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுக்கூடு உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்,உதவி இயக்குனர் மனிஷாவிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.



அதில், தமிழகம் முழுவதும் 25,000 மேற்பட்ட விவசாயிகள் பட்டு விவசாயம் செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருவதாகவும், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வேலை செய்து பயன் அடைந்து வருவதாகவும், இந்த தொழிலுக்கு அடிப்படையான வீரியம் இல்லாத பட்டுப்புழுக்களால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் முழுமையாக தோல்வி அடைந்ததாகவும். இதற்கான காப்பீடு முன்னுக்கு பின் முரணாக உள்ளது எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் கணக்கீடு செய்தும், உற்பத்தி பாதித்த விவசாயிகளுக்கு ஒரு மூட்டை தொகுதிக்கு ரூ.நானூறு வீதம் கொடுத்து உதவுமாறு தமிழக அரசையும், பட்டு வளர்ச்சித் துறையும் கேட்டுக் கொள்வதாகவும் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...