கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - ஆனைமலை, மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என்பதை கணித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் துணை ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஆனைமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் தற்போது (மே.20) உள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ரப்பர் படகு மற்றும் கயிறு மூலம் பாதுகாப்பாக மீட்பது, ஊட்டி மற்றும் கோத்தகிரி மலைப் பாதையில் மண்சரிவு காரணமாக சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது, போக்குவரத்தை சீர் செய்வது, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்பது உட்பட பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மழை பாதிப்பு சம்மந்தமான தொடர்புக்கு பேரிடர் மேலாண்மை உதவி எண் 1077ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...