உதகையில் 126வது மலர் கண்காட்சி மே 26 வரை நீட்டிப்பு

126வது மலர் கண்காட்சி ஊட்டியில் தொடங்கியது, சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் மே 26 வரை நீட்டிப்பட்டுள்ளது. டிஸ்னி வேல்டு, மலை ரெயில் உள்ளிட்ட அலங்காரங்கள் கண்டுகளிக்க மக்கள் வருகை தருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே.10 அன்று தொடங்கியது.



இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்கள் கொண்டு மலை ரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள் மற்றும் மலர் அலங்காரங்கள் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அழகிய கண்காட்சியை பார்க்கவும், ரசிக்கவும் வருகை புரிந்தனர்.



இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைய வேண்டிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் இதனை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்க தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 126வது மலர் கண்காட்சி மே.26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...