ஈசா யோகா மின் மயானத்திற்கு எதிர்ப்பு - கோவை ஆட்சியரிடம் பெரியார் அம்பேத்கர் இயக்கத்தினர் மனு

ஈசாவின் மின் மயான அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். எதிர்ப்பையும் மீறி மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று பெரியார் அம்பேத்கர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் ஈசா யோகா சார்பில் அமைய உள்ள மின் மயானத்திற்கு தடை விதிக்க கோரி பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு இன்று மே.21 அளித்துள்ளனர். கோவையில் பல்வேறு பகுதியில் ஈசா மையத்தின் மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது.

இன்னும் கூடுதலாக மின் மயானங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் செம்மேடு பகுதியில் ஈசா யோகா நிறுவனம் சார்பில் இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரவிகுமார் கூறுகையில், அப்பகுதியில் ஏற்கனவே சுடுகாடும், இடுகாடும் இருப்பதாகவும், மேலும் ஈசாவில் மர்ம மரணங்கள் தொடர்வதாகவும், இது குறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் வேண்டுமென்றே மின் மயானம் அமைய உள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே மாவட்ட நிர்வாகம் ஈசாவின் மின் மயான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். அங்கு ஈசாவின் மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...