கோவை 86-வது வார்டு புள்ளுக்காடு பகுதியில் குடிநீர் பிரச்சனை - பகுதிமக்கள் திடீர் சாலை மறியல்

குடிநீர் பிரச்சனை பற்றி பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புல்லுக்காடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி 86-வது வார்டு புல்லுக்காடு பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளை பராமரிக்க வேண்டும் என்றும், குப்பைகளால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடை சரிசெய்ய வலியுறுத்தியும் பலமுறை கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வைத்த நிலையில், கடந்த பல நாட்களாக புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் குடிநீர் வினியோகமும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனால் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புள்ளுகாடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த கோவை உக்கடம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...