கோவை நொய்யலாற்று நீரில் கலந்த ரசாயன கழிவுகள்; நோய்த்தொற்று பரவும் அச்சம்

கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து காளவாய் தடுப்பணையை அடையும் தண்ணீர் நுரைதள்ளி வெளியேறுவதால் துர்நாற்றமும் நோய்த்தொற்று பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை நெய்யலாற்றில் தற்பொழுது நீர்வரத்து துவங்கியுள்ளது.



இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர். கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த தடுப்பணை ஒருகாலத்தில் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது என்பது குறிப்புடத்தக்கது.



தற்பொழுது நொய்யலாற்று நீர்வழி தடங்களை தூற்வாராததும், நீர்வழித்தட வழிதடங்களின் அருகில் செயல்பட்டுவரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கல் வழியாக நொய்யலாற்றில் கலக்கும் அசுத்த நீராலும் தற்பொழுது காளவாய் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் நுறையுடன் வெளியேறிவருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்தொற்று பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...