கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக மெடி அப்டேட் கருத்தரங்கு - மருத்துவர்கள் பங்கேற்பு

கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலனை முன்னிட்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அறிந்துகொள்ள மெடி அப்டேட் கருத்தரங்குகள் உதவியாக இருக்கும் என்று கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.


கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக அன்னூர் வட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக "மெடி அப்டேட்" கருத்தரங்கை நடத்தியது. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் கேஎம்சிஹெச் மருத்துவமனை தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. இவற்றில் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில் தற்போது முதன்முறையாக கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னூரில் ஒரு மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.

கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்திய கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலனை முன்னிட்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அவர்கள் அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மருத்துவத் துறைகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. நோயாளிகளுக்கு தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை அளிப்பதற்கு மருத்துவர்கள் அவற்றைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகிறது என்றும், இதுபோன்ற கருத்தரங்குகள் மருத்துவர்கள் தங்கள் தொழில் திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு, சக மருத்துவர்களுடன் கலந்துரையாடவும் நல்வாய்ப்பாக அமைகின்றன என்று கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக கேஎம்சிஹெச் மருத்துவ இயக்குனரும், எலும்பு முறிவு ஆலோசகர் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் விமல்குமார் அனைவரையும் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற கோவில்பாளையம் மெடி அப்டேட் 2024 கருத்தரங்கில் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...