மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து நேர்கோட்டில் இன்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.


கோவை: கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளின் வலசை பாதையாகவும் மேட்டுப்பாளையம் வனப்பகுதி விளங்குகிறது. வலசைப்பாதை வழியாகவும், யானைகள் இடம்பெயர்ந்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்தநிலையில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று மே.23 தொடங்கியது.



அதன்படி மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து நேர்கோட்டில் இன்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள் 6 குழுக்களாக பிரிந்து ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக்குட்டை, குஞ்சப்பனை, உலியூர் ஆகிய பகுதிகளில் யானை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, நாளை யானைகளின் சாணம், சிறுநீர், அதன் கால் தடயங்கள் ஆகியவற்றை வைத்து யானைகள் கணக்கெடுக்கும் பணியும், நாளை மறுநாள் நீர்நிலைகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...