உடுமலையில் நாராயண கவிராயரின் 43 -வது நினைவு நாள் கடைபிடிப்பு

உடுமலைப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு உடுமலை நாராயணகவியின் பெயர் வைக்க வேண்டும் என்று உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியைச் சேர்ந்த உடுமலை நாராயண கவிராயர் ஏறத்தாழ 40 ஆண்டு காலம் நாடக உலகிலும், திரைத்துறையிலும் தனது பகுத்தறிவு பாடல்களாலும், தேசபக்தி பாடல்களாலும் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருந்தார்.

இவரின் 43 வது நினைவு நாள் உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் சார்பில், உடுமலை நாராயணகவிராயர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பேரவையின் சார்பாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடுமலைப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு உடுமலை நாராயணகவியின் பெயர் வைத்திட தமிழக அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்வது, உடுமலை நாராயணகவியின் பிறந்தநாளை அரசு சார்பில் கொண்டாடுவது போல, நினைவு நாளையும் அரசு சார்பில் அனுசரிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது,உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கு, புதிய நூல்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுவதால், குடிமைப் பயிற்சி நூல்கள் உட்பட புதிய நூல்களை மணிமண்டப நூலகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.பேரவையின் 30-வது ஆண்டு நிறைவு விழாவை ஜூலையில் விமரிசையாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.



இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் உடுமலை நாராயணகவியின் பேரன் திருப்பூர் வழக்கறிஞர் சுந்தரராசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பேரவையின் தலைவர் அமிர்தநேயன் அனைவரையும் வரவேற்று, தீர்மானங்களை வாசித்தார்.

இந்நிகழ்வில் இலக்கியப் பேரவை உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கொங்கு மண்டல ஆய்வு மையத்தின் நிர்வாகி எழுத்தாளர் உடுமலை ரவி, பாவலரேறு தேன்தமிழ்ப் பாசறை நிர்வாகி கொழுமம் ஆதி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் நடராஜன், மளிகைசெல்வம் என்கின்ற ஜி.செல்வராஜ், பேரவையின் புரவலர் பா.விக்னேஷ், மாணவர்கள் எழில் குமரன், ஜெயமகேஸ்வரி, பவித்ரா, வேலுமணி, மணிமண்டப நூலகர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பேரவையின் துணைத்தலைவர் ஆசிரியர் செல்லத்துரை நன்றி கூறினார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...