தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

முன் விரோதம் காரணமாக தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் குறித்து தேவையற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் தொழிலபதிபர் சி.கே.கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலராக இருந்தவர் கிருஷ்ணசாமி. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தொழிலதிபர் சி.கே.கண்ணன் என்பவர் இந்து அறநிலைய துறையில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கிருஷ்ணசாமி அறங்காவலர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தொழிலதிபர் சி.கே.கண்ணன் தவறான புகார் அளித்ததோடு, வீண்வதந்தி பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.



தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் வானுகன் கூறும் போது, கடந்த 1995 ல் இருந்து அறங்காவலராக இருந்து வந்த கிருஷ்ணசாமி பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதே போல மதுக்கரை பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக தேவையற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் சி.கே.கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...