வழிபாட்டு தலங்கள் கட்ட தடையில்லா சான்று பெற எளிய நடைமுறை உருவாக்கிய முதலமைச்சருக்கு நன்றி - முகம்மது ரபி

தமிழகத்தில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள், ஆலயங்கள் ஆகியவற்றை நிர்மாணித்தல், புதுப்பித்தல் ஆகிய நடைமுறைகளை எளிமைப்படுத்திய தமிழக அரசுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி நன்றி தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், நீண்ட காலமாக, தமிழகத்தில் புதிதாக பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிப்பாட்டுத் தலங்கள் நிர்மாணித்தல், மற்றும் புனரமைப்புப் பணிகள் செய்வதற்கும் பல ஆண்டு காலமாக நடை முறை சிக்கல் இருந்து வந்தது. இதை, இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பிலும், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சர் திராவிடமாடல் நல்லாட்சி நடத்திவரும் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண கோரிக்கை வைத்தோம்.

அதன் படி அண்மையில், சிறுபான்மையின மக்களின் வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்க்கு தடையில்லா சான்று பெற இருந்த நடைமுறைகளை எளிமையாக்கி தந்த முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சிறுபான்மை நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.



அதேபோல, பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் கட்டிட பராமரித்து பணி மேற்கொள்ள வருடத்திற்கு 10 கோடி அதிகரித்து நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர், கோவையில் இஸ்லாமியர் பெண்கள் கல்லூரி துவக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வக்பு வாரிய நிலத்தில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி உடனடியாக துவக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

கோவையில் பழமை வாய்ந்த ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளிவாசல் மயான இடத்தை வணிக வளாகமாக மாற்றக்கூடாது என வலியுறுத்திய அவர், ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளிவாசலக்கு சொந்தமாக கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டுவதோடு, அனைத்து சமுதாய மக்களுக்கும் உயர்க்கல்வி பயிற்சி சென்டர் ஒன்றை அதே இடத்தில் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, பல் சமய நல்லுறவு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாஹிர், செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இஸ்மாயில், மாவட்டத் துணைச் செயலாளர் சீனிவாசன், கோவை தல்ஹா ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...