கோவை மாநகராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பெர்க்ஸ் பள்ளி நுழைவு வாயில் அருகில் அமைந்துள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் லங்கா கார்னர் பகுதியில், மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலை பெர்க்ஸ் பள்ளி நுழைவு வாயில் அருகில் அமைந்துள்ள வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (24.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட லங்கா கார்னர் பகுதியில், மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (24.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



உடன் மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...