மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வால்பாறையில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மே மாதம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது மழையும் அதிகமாக பெய்து வருகிறது.

இந்த மழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கள் ஆறு, சின்னகல்லார் நீர்வீழ்ச்சி, கருமலை ஆறு மற்றும் கெஜமுடி ஆறு, ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழும் இடமாக கூழாங்கள் ஆறு உள்ளது.

இந்நிலையில் மழை சமயங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.



இதில் தண்ணீரில் தத்தளிக்கும் சிறுவனை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் காப்பற்றி வருவதும், நீரில் மூழ்கிய நிலையில் சிறுவனை காப்பாற்றி வருவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



பின்பு சுற்றுலா பயணிகளுக்கு மழைக்காலங்களில் ஆற்றில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதில் தீயணைப்பு துறையினர், சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...