மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு

மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் வனத்துறையினர் யானைகளின் கணக்கெடுப்பு பணியை மூன்று நாட்களாக நடத்திவருகின்றனர். கணக்கெடுப்பில் யானைகளின் நடமாட்டம் மற்றும் நீர்நிலைகளில் அவற்றின் தொகை குறித்து தகவல் சேகரிக்கப்படுகிறது.


கோவை: கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளின் வலசைப் பாதையாகவும் மேட்டுப்பாளையம் வனப்பகுதி விளங்கி வருகிறது.

தற்போது வனப்பகுதியில் யானைகள் இடம்பெயர்ந்து செல்வது அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.



அதன்படி மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளிலும், சிறுமுகை வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வனபாதுகாவலர்கள் 6 குழுக்களாக பிரிந்து ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக் குட்டை,உலியூர் ஆகிய பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் யானைகளின் நடமாட்டம் குறித்து நேரிடையாகவும், இரண்டாவது நாளான 24 ஆம்தேதி நேர்கோட்டில் வனப்பகுதியில் இடது மற்றும் வலது புறம் யானைகளின் சாணம் சிறுநீர் மற்றும் கால் தடயங்களை வைத்தும் யானைகள் கணக்கெடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர். 



மூன்றாவது நாளான நேற்று (மே.25) வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள் ஆகிய நீர்நிலைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் கணக்கெடுக்கும் பணி தினசரி காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...