கோவை- கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தும் வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்


கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படும் 18 வழித் தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழிகளில்  தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் செல்லும் பயணிகள் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தில் நின்று இருந்த திருச்சூர் பயணிகள் ரயிலை சோதனையிட்டனர்.

அப்போது சிறு, சிறு மூட்டைகளாக 1.5 டன் அளவிற்கு ரேசன் அரிசி பயணிகளின் இருக்கைகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 1.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். எனினும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாரும் சிக்கவில்லை.

இந்நிலையில் இந்த சோதனை தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், திருச்சூர் செல்லும் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டு ரேசன் அரிசியை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி அதிகளவு கடத்தப்படுவதாகவும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அரிசி கடத்தப்படும் 18 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த 18 வழித்தடங்களில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தற்போது நடைபெற்றுள்ள இந்த சோதனையில் கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை எனவும் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...