கோடை வெயில் வாட்டும் நிலையில் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருவதால் போக்குவரத்து மாற்றம்


தமிழகத்தில் சமவெளி பகுதிகளிலும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒரு பகுதியை கடக்க பல மணிநேரம் ஆகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை இதுவரை எந்த கோடைக் காலங்களிலும் இல்லாத அளவிற்கு வாகன கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. 

அதன்படி, கடந்த சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 8) வரும் மே 31ம் தேதி வரை கோவையிலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் காட்டேரி ஜங்ஷனிலிருந்து கேத்தி பாலடா வழியாக உதகைக்கும், கர்நாடகாவிலிருந்து கல்லட்டி வழியாக வரும் இலகுரக வாகனங்கள் தலைக்குந்தாவிலிருந்து புதுமந்து வழியாக உதகைக்கும், இதேபோல் கேரளாவிலிருந்து தலைக்குந்தா வழியாக வரும் இலகுரக வாகனங்கள் குலிச்சோலை வழியாக உதகைக்கு அனுமதிக்கப்படும்.

உள்ளூர் வாகனங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் கல்லட்டி மலைபாதையில் அனுமதிக்கப்படமாட்டாது என்று நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தெரிவித்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...