தாராபுரம் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம், இரண்டு லாரிகள் பறிமுதல்

ஜோதியம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண்வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தப்பியோடிய ஓட்டுநர்களை தேடிவருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண்வெட்டி எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்வதாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் மற்றும் வட்டாட்சியர் கோவிந்தசாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.



அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் உத்தரவின் பேரில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, ஜோதியம்பட்டி பகுதியில் புல.எண் 230/6 என்ற பூமியில் சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக லாரிகள் மூலம் கிரவல் மண் அள்ளிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



சம்பவ இடத்துக்கு தாராபுரம் வட்டாட்சியர் வருவதை அறிந்த ஹிட்டாச்சி வாகன ஓட்டுனர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சாவியை எடுத்துக் கொண்டு பேட்டரி ஒயர்களை கழற்றி விட்டு தப்பி சென்றனர்.



அதன் பிறகு குண்டடம் காவல் ஆய்வாளருக்கு தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் போலீசார், குண்டடம் நில வாருவாய் அலுவலர், குண்டடம் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் பேட்டரி மற்றும் மாற்றுச் சாவியை பயன்படுத்தி இரண்டு லாரிகளையும் ஹிட்டாச்சி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து குண்டடம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி அளித்த தகவலின் பெயரில் இரண்டு லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...