நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு வசதியாக குறுஞ்செய்தி சேவை துவக்கம்


இந்தியப் பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் படி, நீலகிரி தேயிலை வாரியம் சார்பில் சிறு தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் புதிதாக குறுஞ்செய்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் இத்திட்டத்தினை துவக்கி வைத்து பேசுகையில், நீலகிரி தேயிலை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் சிறிய தேயிலை விவசாயிகளுக்கு மாதத்திற்கு 5 முறை என குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால், விவசாயிகள் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு பயனடையலாம்" என்றார்.



இதுகுறித்து, தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் பால்ராசு கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் தேயிலை விவசாயிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம், பச்சை இலை விலை நிலவரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தர பராமரிப்பு மற்றும் மானியங்கள், சராசரி விலை உள்ளிட்ட முக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் நாயர் கூறுகையில், இந்த குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தின் மூலம் வங்கி உடன் சிறிய விவசாயிகள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சரியான காலத்தில் தங்களது பணியினை செய்து லாபம் மற்றும் உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என தேயிலை வாரிய துணைத் தலைவர் டி.ஹெக்டே தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...