கோவை மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அந்த மனுக்கள் மீதான மறுவிசாரணை ஒவ்வொருவாரமும் புதன்கிழமை அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி காவலர் குறைதீர்க்கும் முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைானத்தில் உள்ள மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் நேற்று மே.29 நடைபெற்றது.



இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



இந்த முகாமில் குடும்பபிரச்சினை, பணப்பரிமாற்ற பிரச்சினை, இடப்பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக 79 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் 1 மனு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. 2 மனுக்களுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் புகார் ஏற்பு மனு வழங்கப்பட்டது. 67 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 9 மனுக்கள் மீது மேல் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டும் தீர்வு காணப்பட்டது.

வாரத்தில் புதன்கிழமை தவிர்த்த பிற நாட்களில் அந்தந்த உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்திரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...