கோவை ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்ஸில் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட கிளீனர் கைது

ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்லில் இருந்து பயணிகள் இறங்கிகொண்டிருந்தபோது, ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட ஆம்னி பேருந்தின் கிளீனர் சுபாஷ் சந்திர போசை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: விருதுநகர் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் கோவை நோக்கி வந்தது. பஸ்ஸில் சரவணம்பட்டி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஊழியரும் பயணம் செய்தார்.

இந்த நிலையில் நேற்று மே.29 காலை கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகில் ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது கிளீனர் ஆக பணியாற்றி வரும் மாயவரம் மஞ்சில்குடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (41) என்பவர் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கிளீனர் சுபாஷ் சந்திரபோஸை கணவர் மற்றும் சக பயணிகள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இறங்க உதவி செய்வதற்காகத்தான் கையை நீட்டியதாக கூறினார். இதை ஏற்காத அவர்கள் அவரை சத்தம் போட்டனர். ஆனால் அவர்களை மிரட்டிய அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் இது குறித்து ஐடி பெண் ஊழியர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஐயாசாமி பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆம்னி பஸ் கிளீனர் சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...