கோவை KMCH மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - சுகாதாரத்துறையிடம் ரகுநாத் என்பவர் மனு..!

கேஎம்சிஎச் மருத்துவமனையை மூடி, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய் வேண்டும் என்று கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள கேஎம்சிஎச் என்ற தனியார் மருத்துவமனையில், ராஜா என்பவர் மருத்துவமனை ஊழியர்களாலும், காவலர்களாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் மருத்துவமனை காவலர், நிர்வாகிகள் என 8 பேர் கைது செய்யப்பட்டு, நேற்று மே.29 கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசு சார்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனை விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும் மருத்துவமனையை மூட வேண்டுமெனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் இன்று மே.30 மனு அளித்துள்ளார்.

இது குறித்து மனுதாரர் ரகுநாத் கூறுகையில், உயிரை காப்பாற்ற கூடிய இடத்தில் இருக்கும் மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவத்தில் மருத்துவத்துறை சார்ந்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர், துறை சார்ந்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வது மட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டும் என்று தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவு என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...