கோவை காந்திபுரத்தில் பழக்கடையில் ரூ.10,000 திருடிய 17 வயது சிறுவன் கைது

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் முத்துவேல் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் ரூ.10,000 ஆயிரம் பணத்தை திருடிய ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் முத்துவேல்(55). இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சங்கர் என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி கல்லாவில் ரூ.10 ஆயிரம் பணத்தை வைத்து விட்டு செல்வதாக சங்கரிடம், முத்துவேல் கூறிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் சங்கர் போன் செய்து கடை உரிமையாளர் முத்துவேலிடம், பக்கத்து கடையில் வேலை செய்யும் 17 வயது சிறுவன் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவன் பணம் திருடியது உறுதியானது. இருவரும் அவரை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மே.30 சிறுவன் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக முத்துவேலுக்கு தெரியவந்தது.

அங்கு சென்று அந்த சிறுவனை பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் திருடியது சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர். அவனிடம் இருந்து ரூ.1,700 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...