கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதைக் கண்டித்து சக்தி சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகரில் இந்து மத கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்து கடவுள்களை அவமதிக்கும் செயலாக உள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் இந்து கட்சியின் சக்தி சேனா அமைப்பினர் இன்று மனு அளித்தனர்.



முன்னதாக மனு அளிக்க வந்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இச்செயல் மாற்றுமதத்தினரின் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுவதாக அமைகிறது. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பவர்களில் பாதி பேர் பிற மதத்தை சார்ந்தவர்கள்.

இச்செயலில் ஈடுபடுபவர்கள் தானமாக பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதை வண்மயாக கண்டிக்கிறோம். இதில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கூறினர். 

முன்னதாக, மனு அளக்கவந்த சக்தி சேனா அமைப்பினர் கடவுள் வேடமணிந்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...