பயணச்சீட்டு கேட்ட நடத்துனருக்கு கத்திகுத்து- ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் ஆத்திரம்



பயணச்சீட்டு வழங்குவதில் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலரை பிடித்த காந்திபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. இதில்  கோவை போத்தனூர் ரயில்வே காவலர் சிவராமசந்திரன் கோவை உக்கடத்திற்கு பயணச்சீட்டை பெற்று பயணம் செய்துள்ளார்.

பின்னர் பேருந்து உக்கடம் பேருந்து நிலையம் வந்தபின்னர் நடத்துனர் பாண்டியராஜன், காவலர் சிவராமசந்திரன் வாங்கிய பயணச்சீட்டு உக்கடம் வரை மட்டுமே செல்லும் என்றும், காந்திபுரம் செல்லவேண்டுமானால் மீண்டும் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு சிவராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியநிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வரும் போது கோபம் அடைந்த காவலர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியராஜன் காலில் குத்தியுள்ளார்.

இதனைக்கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். உடனே பேருந்து ஓட்டுனர் காட்டூர் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து கத்திக்குத்தில் காயமடைந்த நடத்துனர் பாண்டியராஜனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, ரயில்வே காவலர் சிவராமச்சந்திரனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...