கோவை மருதமலை அருகே குட்டி யானை மாயம் - தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

மருதமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் யானையில் அருகில் இருந்த குட்டியானை நேற்றிரவு மாயமாகியுள்ளது. அந்த குட்டியானை எங்கு சென்றுள்ளது என்று வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மூன்றாவது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணாமல்போனதால் தேடும் பணியில் வனத்துறை ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினரும், வனத் துறையினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய் யானையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தானாக உணவு உட்கொள்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சையின் போது குட்டி யானையுடன் சுற்றித் திரிந்த மற்றொரு குட்டி யானை அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், நேற்று இரவு அந்த குட்டி யானையுடன் இந்த ஆண் குட்டி யானை சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதனை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் இன்று ஜூன்.1 தகவல் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...