கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில் திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்

ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையின்போது, தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், இன்று ஜூன்.1 கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மாவட்டச் செயலாளர்கள், திமுக கழக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம், கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, ஜூன்- 4 அன்று நடைபெற உள்ள, வாக்கு எண்ணிக்கையின்போது, தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, திமுக கழக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குமார், தலைமை முகவர், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு ‌‌உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...