வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவன் புதுகாடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் புதுகாடு பகுதியில் குடியிருந்து வரும் சுரேஷ் என்பவரது மகன் முகேஷ் வயது பதினெட்டு இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் எஸ்என்எம்வி கல்லூரி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று மாலை வால்பாறை வந்து விட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் புதுகாடு எஸ்டேட் பகுதிக்கு சென்று உள்ளார். வன பகுதியில் இருந்து வந்தஇரண்டு காட்டு யானைகள் சாலையில் நின்று உள்ளது. யானையை பார்த்து பைக் நிறுத்தி உள்ளனர். இதில் யானை இவர்களை தாக்கியது. இதில் சந்தோஷம் என்பவர் லேசான காயத்துடன் தப்பி ஓடினார். முகேஷ் என்பவரை யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவரை பொதுமக்கள் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உள்ளனர் அங்கு இவர் இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில்

வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளனர்.



கல்லூரி மாணவன் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...