தாராபுரம் வழியாக வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் 8-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் 5- பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பையுடன் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற போலீசார் சந்தேகப்படும்படி கைப்பையுடன் சுற்றித்திரிந்த நபரை சோதனை செய்ததில் கைப்பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நலமானார் கோட்டை பகுதியைச் சேர்ந்த சுஜித்குமார் (20) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சுஜித் குமாரின் நண்பர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிக்குச் சென்ற போலீசார் மதுபாலன் (எ) வடிவேல் (27) கார்த்திக் (30) மோகன்தாஸ் (37) அருண்குமார் (28) என மொத்தம் 5- பேரை தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...