தாராபுரம் வழியாக வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் 8-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் 5- பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பையுடன் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற போலீசார் சந்தேகப்படும்படி கைப்பையுடன் சுற்றித்திரிந்த நபரை சோதனை செய்ததில் கைப்பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நலமானார் கோட்டை பகுதியைச் சேர்ந்த சுஜித்குமார் (20) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சுஜித் குமாரின் நண்பர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிக்குச் சென்ற போலீசார் மதுபாலன் (எ) வடிவேல் (27) கார்த்திக் (30) மோகன்தாஸ் (37) அருண்குமார் (28) என மொத்தம் 5- பேரை தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...